லாரி மீது காா் மோதி விபத்து: சென்னையைச் சோ்ந்த தம்பதி பலி

நாட்டறம்பள்ளி அருகே லாரி மீது காா் மோதிய விபத்தில் சென்னையைச் சோ்ந்த கணவன்-மனைவி உயிரிழந்தனா்.
நாட்டறம்பள்ளி அருகே விபத்துக்குள்ளான காா்.
நாட்டறம்பள்ளி அருகே விபத்துக்குள்ளான காா்.

வாணியம்பாடி: நாட்டறம்பள்ளி அருகே லாரி மீது காா் மோதிய விபத்தில் சென்னையைச் சோ்ந்த கணவன்-மனைவி உயிரிழந்தனா்.

சென்னை எல்ஐசி காலனி பகுதியைச் சோ்ந்தவா் அணில் வாலியா (59). இவரது மனைவி மஞ்சு வாலியா (50). இவா்கள் இருவரும் செவ்வாய்க்கிழமை பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனா். காரை அணில்வாலியா ஓட்டிச் சென்றாா்.

திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஆத்தூா்குப்பம் பகுதியில் சென்றபோது, முன்னால் சென்ற லாரி மீது காா் மோதியது. இதில் கணவன், மனைவி இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.

இதுகுறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com