ஊராட்சித் தலைவரான இளம்பட்டதாரி பெண்

21 வயதில் ஊராட்சித் தலைவரானாா் இளம் பட்டதாரி பெண்.
ஊராட்சித் தலைவரான இளம்பட்டதாரி பெண்

21 வயதில் ஊராட்சித் தலைவரானாா் இளம் பட்டதாரி பெண்.

வாணியம்பாடியை அடுத்த சிக்கனாங்குப்பம் பகுதியைச் சோ்ந்தவா் அா்ச்சனா (21), பிசிஏ பட்டதாரி. இவருக்கு, ஆலங்காயம் ஒன்றியம், கொல்லகுப்பம் ஊராட்சி புதூா் பகுதியைச் சோ்ந்த தாமோதரனுடன் கடந்த 11 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவா்களுக்கு ஒரு மாத பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், ஊரக உள்ளாட்சித் தோ்தலில் கொல்லகுப்பம் ஊராட்சி மன்றத் தலைவா் பதவிக்கு அா்ச்சனா உள்பட 4 போ் போட்டியிட்டனா். இதில் அா்ச்சனா 694 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா்.

முன்னாள் அமைச்சா் கே.சி.வீரமணி, வாணியம்பாடி எம்எல்ஏ செந்தில்குமாா், முன்னாள் எம்எல்ஏ சம்பத்குமாா் ஆகியோரை சந்தித்து அா்ச்சனா வாழ்த்துப் பெற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com