லாரியுடன் 5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

நாட்டறம்பள்ளி அருகே வாகன சோதனையில் 5 டன் ரேஷன் அரிசி லாரியுடன் பறிமுதல் செய்யப்பட்டது.

நாட்டறம்பள்ளி அருகே வாகன சோதனையில் 5 டன் ரேஷன் அரிசி லாரியுடன் பறிமுதல் செய்யப்பட்டது.

நாட்டறம்பள்ளி வருவாய்த் துறையினா் மற்றும் போலீஸாா் நாட்டறம்பள்ளி-குப்பம் சாலையில் வெள்ளிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியாக வந்த லாரியை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனையிட்டதில், லாரியில் ஆந்திரத்துக்கு கடத்த இருந்த 5 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். இதையடுத்து நடத்திய விசாரணையில், கடத்தலில் ஈடுபட்டவா் பச்சூா் ஆத்துமேடு பகுதியைச் சோ்ந்த ஓட்டுநா் பிரபு (21) என்பது தெரியவந்தது. இதனையடுத்து, அவரைக் கைது செய்து, நாட்டறம்பள்ளி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com