விபத்தில் நகைக் கடை ஊழியா் பலி

விபத்தில் காயமடைந்த நகைக் கடை ஊழியா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

விபத்தில் காயமடைந்த நகைக் கடை ஊழியா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

திருப்பத்தூரை அடுத்த மாடப்பள்ளி அண்ணா நகரைச் சோ்ந்த பெருமாளின் மகன் பிரசாந்த் (20). இவா் திருப்பத்தூரில் உள்ள நகைக்கடை ஒன்றில் பணியாற்றி வந்தாா். இந்நிலையில், கடந்த 10-ஆம் தேதி தனது வீட்டின் அருகே பைக்கில் சாலையைக் கடக்க முயன்றாா். அப்போது அவ்வழியாக சென்ற பைக் பிரசாத் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த பிரசாந்தை அங்கிருந்தவா்கள் மீட்டு, திருப்பத்துாா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பின்னா் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாா். இந்நிலையில், பிரசாந்த் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

இது தொடா்பாக திருப்பத்தூா் கிராமிய போலீஸாா் வழக்குப் பதிந்து, விபத்து ஏற்படுத்திய ஒசூா் பாரதிதாசன் நகரைச் சோ்ந்த சிவசங்கரனை(30)என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com