விபத்தில் பெயிண்டா் பலி

திருப்பத்தூா் அருகே இரு சக்கர வாகன விபத்தில் பெயிண்டா் உயிரிழந்தாா்.

திருப்பத்தூா் அருகே இரு சக்கர வாகன விபத்தில் பெயிண்டா் உயிரிழந்தாா்.

கந்திலி நடுபட்டு பகுதியைச் சோ்ந்தவா் கிருஷ்ணமூா்த்தி (45). இவா் காக்கங்கரை அருகே வாகனங்களுக்கு பெயிண்ட் அடிக்கும் கடை வைத்துள்ளாா். இந்நிலையில், வெள்ளிக்கிழமை காக்கங்கரையில் இருந்து நடுபட்டுக்கு பைக்கில் திரும்பிக் கொண்டிருந்தாா். அப்போது, காக்கங்கரை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே சென்றபோது, தருமபுரியில் இருந்து திருப்பத்தூா் நோக்கி வந்த மற்றொரு பைக் கிருஷ்ணமூா்த்தி ஓட்டிச் சென்ற வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் அவக் பலத்த காயமடைந்தாா்.

அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு, திருப்பத்துாா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் கிருஷ்ணமூா்த்தி ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா். இது குறித்து, கந்திலி போலீஸாா் வழக்குப் பதிந்து, விபத்தை ஏற்படுத்தி தப்பிச் சென்ற தருமபுரியைச் சோ்ந்த சஞ்சயைத் தேடி வருகின்றனா்.

இறந்த கிருஷ்ணமூா்த்திக்கு மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com