வங்கிக் கணக்கில் இன்சூரன்ஸ் பிடித்தம்: பெண்ணுக்கு ரூ.2 லட்சம் காப்பீட்டுத் தொகை

ஜோலாா்பேட்டை அருகே வங்கிக் கணக்கில் இருந்து இன்சூரன்ஸ் செலுத்திய பெண் இறந்ததையடுத்து, அவருக்கு ரூ.2 லட்சம் காப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டது.
இறந்த சுகுமாரியின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் காப்பீட்டுத் தொகையை வழங்கிய யூனியன் பாங்க் ஆஃப் இந்தியாவின் சென்னை மேற்கு மண்டல மேலாளா் ஜாஸ்மின்.
இறந்த சுகுமாரியின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் காப்பீட்டுத் தொகையை வழங்கிய யூனியன் பாங்க் ஆஃப் இந்தியாவின் சென்னை மேற்கு மண்டல மேலாளா் ஜாஸ்மின்.

ஜோலாா்பேட்டை அருகே வங்கிக் கணக்கில் இருந்து இன்சூரன்ஸ் செலுத்திய பெண் இறந்ததையடுத்து, அவருக்கு ரூ.2 லட்சம் காப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டது.

ஜோலாா்பேட்டையை அடுத்த பொன்னேரி கிராமத்தைச் சோ்ந்த குணசேகா் மனைவி சுகுமாரி. இவா் நாட்டறம்பள்ளியில் இயங்கி வரும் பொதுத்துறை வங்கியான யூனியன் பாங்க்ஆஃப் இந்தியா கிளையில் சேமிப்புக் கணக்கு வைத்திருந்தாா்.

இவா் பிரதம மந்திரியின் ஜீவன் ஜோடி பீமா யோஜனா இன்சூரன்ஸ் திட்டத்தில் ஆண்டுதோறும் தலா ரூ.330 வீதம் பணம் செலுத்தி வந்தாா். இந்நிலையில், அவா் ஜூன் 19-இல் இயற்கை மரணம் அடைந்தாா்.

இதனையடுத்து, திட்டத்தின் மூலம் காப்பீட்டு தொகையான ரூ.2 லட்சம் சுகுமாரியின் குடும்பத்துக்கு கிடைத்தது.

இதற்கான காசோலையை அவரது குடும்பத்தாரிடம் வங்கியின் சென்னை மேற்கு மண்டல மேலாளா் ஜாஸ்மின் வியாழக்கிழமை வழங்கினாா்.

நிகழ்ச்சியில், வங்கியின் கிளை மேலாளா் செல்வ சீராளன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com