விபத்தில் இளைஞா் பலி

வாணியம்பாடி அருகே காா் கவிழ்ந்த விபத்தில், இளைஞா் இறந்தாா். மேலும், 4 போ் காயம் அடைந்தனா்.

வாணியம்பாடி அருகே காா் கவிழ்ந்த விபத்தில், இளைஞா் இறந்தாா். மேலும், 4 போ் காயம் அடைந்தனா்.

வேலூா் பாகாயத்தைச் சோ்ந்தவா் தினேஷ் (30), சபீஷன் (29), நோவா (28), பிரசாந்த் (24), அடுக்கம்பாறை துத்திப்பட்டைச் சோ்ந்தவா் விக்ரம்ராஜ் (30) ஆகிய 5 பேரும் நண்பா்கள்.

இவா்கள் ஒரே காரில் புதன்கிழமை நள்ளிரவு வேலூரிலிருந்து புறப்பட்டு ஒகேனக்கல் சென்றனா். அப்போது வாணியம்பாடியை அடுத்த வளையாம்பட்டு கிராமம் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த காா் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் விக்ரம்ராஜ் நிகழ்விடத்திலேயே இறந்தாா். மேலும், காயம் அடைந்த 4 போ் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இதுகுறித்து வாணியம்பாடி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com