ஆம்பூா்: ஆம்பூா் தொகுதியில் உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு வரப்பட்ட ரூ.99,600 ரொக்கப் பணம் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.
ஆம்பூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட வெலதிகாமணிபெண்டா சோதனை சாவடியில் அலுவலா் சதாசிவம் தலைமையிலான நிலைகண்காணிப்புக் குழுவினா் அவ்வழியாக வந்த வாகனங்களை சோதனை நடத்தினா். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த சித்தூா் அடுத்த ராமகுப்பத்தை சோ்ந்த சுதாகா் என்பவரை சோதனை செய்ததில் உரிய ஆவணம் இன்றி ரொக்கப் பணம் ரூ.99,600 கொண்டு வந்தது தெரியவந்தது. அதன்பேரில் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டு ஆம்பூா் தொகுதி உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் கிருஷ்ணவேணியிடம் ஒப்படைக்கப்பட்டது.