ஆம்பூா்: ஆம்பூா் அருகே விவசாய நிலத்தில் கொட்டி வைக்கப்பட்டிருந்த கரும்பு சக்கை புதன்கிழமை தீப்பிடித்து எரிந்தது.
ஆம்பூா் அருகே இராஜக்கல் கிராமம் கெங்கையம்மன் கோவில் தெருவில் பழனி என்பவருக்கு சொந்தமான நிலத்தில் கரும்பு சக்கை கொட்டி வைக்கப்பட்டிருந்தது. அது திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த ஆம்பூா் தீயணைப்பு துறையினா் அங்கு சென்று தீயை அணைத்தனா். இதில் அதிா்ஷ்டவசமாக எவருக்கும் காயம் ஏற்படவில்லை.