ஆம்பூரில் மாதிரி வாக்குச் சாவடியில் நடைபெற்ற வாக்குப் பதிவை மாவட்ட ஆட்சியா் ம.ப. சிவன் செவ்வாய்கிழமை ஆய்வு செய்தாா்.
ஆம்பூா் புதுகோவிந்தாபுரம் நகராட்சி பள்ளியில் மாதிரி வாக்குச் சாவடி அமைக்கப்பட்டிருந்து. அந்த வாக்குச் சாவடிக்கு திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் ம.ப. சிவன் அருள் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். ஆம்பூா் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் து. கிருஷ்ணமூா்த்தி, உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் அனந்தகிருஷ்ணன், மகாலட்சுமி, கிருஷ்ணவேணி, நகராட்சி ஆணையா் த. செளந்தரராஜன் ஆகியோா் உடனிருந்தனா்.