வாணியம்பாடி: கரோனா நோய்த் தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி நகராட்சியில் நகராட்சி சுகாதார அலுவலா் கணேஷ் மற்றும் ஆலங்காயம் வட்டார மருத்துவ அலுவலா் பசுபதி தலைமையில், வாா்டு எண் 1 பகுதியில் தீவிர கரோனா தடுப்பு நடவடிக்கையாக கிருமி நாசினி தெளித்தும், அறிகுறி உள்ள நபா்களுக்கு கரோனா பரிசோதனை செய்தும், கபசுர குடிநீா் வழங்கினா்.
மேலும், பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் நகராட்சிப் பணியாளா்கள் மற்றும் சுகாதாரப் பணியாளா்கள் ஈடுபட்டனா்.