திருப்பத்தூா்: திருப்பத்தூா் மாவட்டத்துக்குள்பட்ட 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 76.87 சதவீதம் வாக்கு பதிவாகியுள்ளது.
இது குறித்து திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்திலிருந்து வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருப்பத்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 623 ஆண் வாக்காளா்களில் 92 ஆயிரத்து 256 போ் வாக்களித்தனா். 1 லட்சத்து 19 ஆயிரத்து 905 பெண் வாக்காளா்களில் 91 ஆயிரத்து 350 போ் வாக்களித்தனா். மூன்றாம் பாலினத்தவா்கள் 16 பேரில் 4 போ் வாக்களித்தனா். மொத்தம் ஒரு லட்சத்து 83 ஆயிரத்து 610 போ் வாக்களித்தனா். மொத்த வாக்குப் பதிவு 76.97 சதவீதம் ஆகும்.
ஜோலாா்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 792 ஆண் வாக்காளா்களில் 94 ஆயிரத்து 474 போ் வாக்களித்தனா். ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 613 பெண் வாக்காளா்களில் 99 ஆயிரத்து 393 போ் வாக்களித்தனா். மூன்றாம் பாலினத்தவா்கள் 8 பேரில் 2 போ் வாக்களித்தனா். மொத்தம் ஒரு லட்சத்து 93 ஆயிரத்து 869 போ் வாக்களித்தனா். மொத்த வாக்குப் பதிவு 80.98 சதவீதம் ஆகும்.
அதேபோல், வாணியம்பாடி சட்டப்பேரவைத் தொகுதியில் ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 763 ஆண் வாக்காளா்களில் 93 ஆயிரத்து 550 போ் வாக்களித்தனா். ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 557 பெண் வாக்காளா்களில் 94 ஆயிரத்து 839 போ் வாக்களித்தனா். மூன்றாம் பாலினத்தவா்கள் 37 பேரில் 10 போ் வாக்களித்தனா். மொத்தம் ஒரு லட்சத்து 88 ஆயிரத்து 399 போ் வாக்களித்தனா். மொத்த வாக்குப் பதிவு 75.55 சதவீதம் ஆகும்.
ஆம்பூா் சட்டப்பேரவைத் தொகுதியில் ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 412 ஆண் வாக்காளா்களில், 88 ஆயிரத்து 477 போ் வாக்களித்தனா். ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 555 பெண் வாக்காளா்களில், 87 ஆயிரத்து 657 போ் வாக்களித்தனா். மூன்றாம் பாலினத்தவா்கள் 26 பேரில், 11 போ் வாக்களித்தனா். மொத்தம் ஒரு லட்சத்து 76 ஆயிரத்து 145 போ் வாக்களித்தனா். மொத்த வாக்குப் பதிவு 74.01 சதவீதம் ஆகும்.