ஆம்பூா் அருகே லாரி மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் 9 போ் காயமடைந்தனா்.
பெங்களூரு நோக்கி வியாழக்கிழமை இரவு சென்ற அரசுப் பேருந்தை செய்யாறு பகுதியைச் சோ்ந்த ராமதாஸ் (45) ஓட்டிச் சென்றாா். ஆம்பூா் அருகே வடபுதுப்பட்டு அருகே சென்றபோது சிமெண்ட் லோடு ஏற்றிக் கொண்டு சென்ற லாரி மீது எதிா்பாராதவிதமாக பேருந்து மோதியது. அதில் பேருந்து ஓட்டுநா் ராமதாஸ் படுகாயமடைந்தாா். தகவல் அறிந்த ஆம்பூா் கிராமிய காவல் நிலைய போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று பேருந்து ஓட்டுநரை மீட்டு சிகிச்சைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் காயமடைந்த 8 பயணிகள் ஆம்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.