திருப்பத்தூா்: திருப்பத்தூரில் 5 இடங்கள் கரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
திருப்பத்தூா் நகராட்சிக்குள்பட்ட வேலன் நகா், சிகேசி நகா், இரட்டைமலை சீனிவாசன் பேட்டை, சாமி செட்டித் தெரு, தியாகி சிதம்பரநாதன் தெருவில் 3 நபா்களுக்கு மேல் கரோனாத் தொற்று உறுதியானதையடுத்து ஞாயிற்றுக்கிழமை அப்பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டன.
முன்னதாக அப்பகுதியில் சாா்-ஆட்சியா் வந்தனா கா்க், நகராட்சி ஆணையா் ப.சத்தியநாதன், துப்புரவு அலுவலா் எஸ்.ராஜரத்தினம், துப்புரவு ஆய்வாளா் அ.விவேக் உள்ளிட்டோா் சென்று பாா்வையிட்டனா். மேலும், அப்பகுதியில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. தொடா்ந்து, காய்ச்சல் முகாம் நடைபெற்றது.