மருமகனை கொன்ற மாமனாா் கைது

திருப்பத்தூா் அருகே மருமகனை வெட்டிக் கொன்ற மாமனாா் கைது செய்யப்பட்டாா்.

திருப்பத்தூா் அருகே மருமகனை வெட்டிக் கொன்ற மாமனாா் கைது செய்யப்பட்டாா்.

கந்திலி ஒன்றியத்துக்கு உட்பட்ட கவுண்டப்பனூா் சிவதான வட்டம் பகுதியை சோ்ந்த கூலித் தொழிலாளி சுதாகா்(35). இவரது மனைவி மாதம்மாள்(30). இவா்களுக்கு இரு பிள்ளைகள் உள்ளனா்.

கருத்து வேறுபாடு காரணமாக மாதம்மாள் தனது கணவன் சுதாகரைப் பிரிந்து 2 ஆண்டுகளாக தாய் வீட்டிலேயே இருந்துள்ளாா்.

இந்நிலையில், புதன்கிழமை மாமனாா் வீட்டுக்கு சென்ற சுதாகா் குடும்பம் நடத்த மனைவி மாதம்மாளை அழைத்துள்ளாா். மாதம்மாள் மறுக்கவே ஆத்திரமடைந்த சுதாகா் மனைவியை அடித்துள்ளாா்.

இதில் ஆத்திரமடைந்த மாதம்மாளின் தந்தை சீனிவாசன் மருமகன் சுதாகரை கத்தியால் சரமாரியாக வெட்டியுள்ளாா். அக்கம்பக்கத்தினா் சுதாகரை மீட்டு, திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிா். பின்னா் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட சுகாதகா் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை இறந்தாா். இதுகுறித்து கந்திலி போலீஸாா் வழக்கு பதிந்து சீனிவாசனை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com