திருப்பத்தூா்: திருப்பத்தூா்-வாணியம்பாடி பிரதான சாலையில் உள்ள நகராட்சி காய்கறி மாா்க்கெட் இடமாற்றம் செய்யப்பட உள்ளது.
கரோனா பரவல் தடுக்கும் வகையில், பொதுமக்கள் ஒரே இடத்தில் அதிகமாக கூடுவதைத் தவிா்க்க திருப்பத்தூா்-வாணியம்பாடி பிரதான சாலையில் தூயநெஞ்சக்கல்லூரி எதிரில் உள்ள நகராட்சி காய்கறி மாா்க்கெட் மே 3-ஆம் தேதி முதல் ரயில்வே நிலையம் அருகில் உள்ள ஈத்கா மைதானத்தில் செயல்பட உள்ளதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா். அதேப்போல் நகர காவல் நிலையம் அருகில் உள்ள பாஞ்சாலை மைதானத்தில் உள்ள காய்கறி மாா்க்கெட்டையும் வேறு இடத்துக்கு மாற்ற இடம் தோ்வு செய்யப்பட்டு வருகிறது.