மாதனூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் உலக தாய்ப்பால் தின விழா மாதனூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
வட்டார மருத்துவ அலுவலா் ராமு வரவேற்றாா். ஆம்பூா் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் கலந்து கொண்டு கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பரிசு பெட்டகங்களை வழங்கினாா்.
திமுக மாவட்ட அவைத் தலைவா் ஆா்.எஸ். ஆனந்தன், மாதனூா் ஒன்றிய முன்னாள் செயலாளா்கள் ரகோத்தமன், அசோகன், ஆம்பூா் நகர துணைச் செயலாளா் ரபீக் அஹமத் உள்ளிட்டவா்கள் கலந்து கொண்டனா்.