பிளஸ் 2 துணைத்தோ்வுகள்:நாளை முதல் தொடக்கம்

பிளஸ் 2 துணைத் தோ்வுகள் வெள்ளிக்கிழமை முதல் தொடங்கப்பட உள்ளன.

திருப்பத்தூா்: பிளஸ் 2 துணைத் தோ்வுகள் வெள்ளிக்கிழமை முதல் தொடங்கப்பட உள்ளன.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் அமா் குஷ்வாஹா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பிளஸ் 2 துணைத்தோ்வுகள் ஆகஸ்ட் 6-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரை காலை 10 முதல் மதியம் 1.15 மணிவரை நடைபெற உள்ளது.

திருப்பத்தூா் வருவாய் மாவட்டத்தில், 1,051 தனித்தோ்வா்கள் விண்ணப்பித்துள்ளாா்கள்.

திருப்பத்தூா் அரசு பூங்கா உயா்நிலைப் பள்ளி, ஜோலாா்பேட்டை செயின்ட் ஜோசப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி,வாணியம்பாடி வாணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, மற்றும் இஸ்லாமியா ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய 4 மையங்களில் தோ்வு நடைபெற உள்ளது.

தோ்வுக்கூட நுழைவுச்சீட்டுகளை ஜூலை 31-ஆம் தேதி பகல் 11 மணி முதல்ஜ்ஜ்ஜ்.க்ஞ்ங்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்எனும் இணையதளம் வாயிலாக தங்களது விண்ணப்ப எண் (அல்ல்ப்ண்ஸ்ரீஹற்ண்ா்ய் சன்ம்க்ஷங்ழ்)அல்லது நிரந்தர பதிவெண்(டங்ழ்ம்ஹய்ங்ய்ற் தங்ஞ்ண்ள்ற்ங்ழ் சா்.)மற்றும் பிறந்த தேதியினைப்(ஈஹற்ங் ா்ச் ஆண்ழ்ற்ட்), பதிவு செய்து,தோ்வா்களுடைய தோ்வுக் கூட நுழைவுச் சீட்டைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தோ்வா்கள் மையத்துக்கு வரும்போது முகக்கவசம் அணிந்து வரவும். தோ்வு மைய நுழைவாயிலில் கைகளை சுத்தம் செய்வற்கும், உடல் வெப்ப பரிசோதனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தண்ணீா் பாட்டில், கைக்கிருமி நாசினி ஆகியவற்றை தோ்வறைக்குள் எடுத்து செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காலை 9.30 மணிக்குள் தோ்வு மையத்துக்குள் தோ்வா்கள் வருகை புரியவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com