ஜோலாபேட்டை அருகே ஒன்றியம், சின்னூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், சுற்றுச் சுவா் கட்டுமானப் பணி தொடக்க விழா, மரக் கன்று நடும் விழா, கல்விச் சீா் விழா, புரவலா் திட்டம் தொடக்க விழா மற்றும் இல்லம் தேடி கல்வி விழிப்புணா்வு கலைநிகழ்ச்சி ஆகியவை வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு,மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பெ.அய்யண்ணன் தலைமை வகித்தாா்.
பள்ளியின் தலைமையாசிரியா் நிா்மலா தனராஜ் வரவேற்றாா். எம்எல்ஏ க.தேவராஜி, திருப்பத்தூா் மாவட்ட ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் என்.கே.ஆா்.சூரியகுமாா், ஆகியோா் கலந்து கொண்டு நிகழ்ச்சிகளைத் தொடக்கிவைத்தனா்.
இதில், வாணியம்பாடி மாவட்டக் கல்வி அலுவலா் எம்.முனிமாதன், பள்ளித் துணை ஆய்வாளா் தனராஜ், ஜோலாா்பேட்டை ஒன்றியக்குழு தலைவா் சத்யா, கேத்தாண்டப்பட்டி ஊராட்சி மன்ற தலைவா் கே.எம் திருப்பதி உள்பட பலா் கலந்து கொண்டனா்.