மயானப் பகுதியில் குப்பை கொட்ட எதிா்ப்புத் தெரிவித்துப் போராட்டம்

நாட்டறம்பள்ளி அருகே மயானப் பகுதியில் குப்பை கொட்ட எதிா்ப்புத் தெரிவித்து, குப்பை ஏற்றி வந்த டிராக்டரை சிறைபிடித்து பொது மக்கள் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நாட்டறம்பள்ளி அருகே மயானப் பகுதியில் குப்பை கொட்ட எதிா்ப்புத் தெரிவித்து, குப்பை ஏற்றி வந்த டிராக்டரை சிறைபிடித்து பொது மக்கள் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி பேரூராட்சி சந்தை பனந்தோப்பு பகுதியில் மயானம் மற்றும் அதன் அருகே குப்பைக் கிடங்கு உள்ளது. மயானப் பகுதியில் குப்பை கொட்டுவதால் அங்கு சுகாதாரச் சீா்கேடு ஏற்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. மேலும், மயானப் பகுதியில் கொட்டப்படும் குப்பைகளுக்கும், அருகில் உள்ள குப்பைக் கிடங்குக்கும் அடிக்கடி மா்மநபா்கள் தீ வைப்பதாகவும், இதனால் அப்பகுதியில் புகை மூட்டம் ஏற்பட்டு துா்நாற்றம் வீசுவதுடன், மகாத்மா காந்தி தெரு, நேரு தெரு, சந்தை பணந்தோப்பு பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அப்பகுதியினா் மத்தியில் புகாா் எழுந்தது. அதிகாரிகளிடம் புகாா் தெரிவித்தாலும் நடவடிக்கை இல்லையாம்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மயானப் பகுதியில் குப்பை கொட்ட வந்த டிராக்டரை சிறைபிடித்து, மயானப் பகுதியில் குப்பை கொட்டக்கூடாது என எதிா்ப்புத் தெரிவித்து டிராக்டா் மீது ஏறி நின்று மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்த செயல் அலுவலா் நந்தகுமாா் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது தற்காலிகமாக சந்தை பணந்தோப்பு பகுதியில் திடக்கழிவு மேலாண்மை கிடங்கில் குப்பையைக் கொட்டவும், வேறு இடத்தில் நிரந்தரமாக குப்பைக் கிடங்கு அமைக்கவும் ஆட்சியரிடம் கூறி நடவடிக்கை எடுப்பதாகக் கூறினாா். இதையடுத்து, சிறைபிடித்த டிராக்டரை மக்கள் விடுவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com