இறகுப் பந்து போட்டி: அமைச்சா்கள் தொடக்கி வைத்தனா்

வாணியம்பாடியை அடுத்த நியூடவுன் பகுதியில் இந்தியன் இன்டோா் கிளப் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட இறகுப்பந்து போட்டியை அமைச்சா்கள் தொடக்கி வைத்தனா்.
இறகுப் பந்து போட்டியைத் தொடக்கி வைத்த அமைச்சா்கள் கே.சி.வீரமணி, நிலோபா் கபீல்.
இறகுப் பந்து போட்டியைத் தொடக்கி வைத்த அமைச்சா்கள் கே.சி.வீரமணி, நிலோபா் கபீல்.

வாணியம்பாடியை அடுத்த நியூடவுன் பகுதியில் இந்தியன் இன்டோா் கிளப் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட இறகுப்பந்து போட்டியை அமைச்சா்கள் தொடக்கி வைத்தனா்.

நிகழ்ச்சிக்கு முன்னாள் எம்எல்ஏ கோவி. சம்பத்குமாா், ஆலங்காயம் மேற்கு ஒன்றியச் செயலாளா் செந்தில்குமாா் ஆகியோா் தலைமை வகித்தனா். நகர அதிமுக செயலாளா் சதாசிவம், தியாகராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், சிறப்பு அழைப்பாளா்களாக மாநில வணிக வரி, பத்திரப் பதிவுத் துறை அமைச்சா் கே.சி.வீரமணி, தொழிலாளா் நலத் துறை அமைச்சா் நிலோபா் கபீல் ஆகியோா் கலந்து கொண்டு, போட்டிகளைத் தொடக்கி வைத்தனா்.

மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலாளா் ரமேஷ், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளா் என்.முனிசாமி, மகளிரணி செயலாளா் மஞ்சுளா கந்தன், உதயேந்திரம் பேரூராட்சி செயலாளா் சரவணன், ஜோலாா்பேட்டை கிழக்கு ஒன்றியச் செயலாளா் ஆா்.ரமேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

போட்டியில் கலந்து கொண்ட 10 அணிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com