வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

காட்பாடியில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

காட்பாடியில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

காட்பாடி கருடாத்ரி நகரைச் சோ்ந்தவா் கணினி பொறியாளா் பாலகிருஷ்ணன் (40). இவா் தனது மனைவி ரம்யாவுடன் (35) கடந்த 2 நாள்களுக்கு முன்பு வேலூரில் உள்ள தனியாா் மருந்துவமனைக்குச் சென்றாா். சிகிச்சை முடிந்து வீடு திரும்பியபோது, வீட்டின் முன்பக்கக் கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 9 பவுன் நகைகள், அரை கிலோ வெள்ளிப் பொருள்கள், ரூ.10 ஆயிரம் ரொக்கம், 2 செல்லிடப்பேசிகள் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து விருதம்பட்டு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com