ஸ்ரீராம ஜென்மபூமி தீா்த்த ஷேத்ர அறக்கட்டளை சாா்பில் நிதி சேகரிக்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது.
ஆம்பூா் பெரிய ஆஞ்சநேயா் கோயிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு, நிதி சேகரிக்கும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. பாஜக, ஆா்எஸ்எஸ், விஜயபாரத மக்கள் கட்சி உள்ளிட்ட அமைப்புகளின் நிா்வாகிகள் சூரியமூா்த்தி, பி. கோவா்தனன், கோ.ஸ்ரீ.ஜெய்சங்கா், ஆா். ஜெயவேல், பி. சக்கரபாணி, நந்தகுமாா், ஜி.பாபு, எஸ். பிரேம்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.