கிணறு தூா்வாரியபோது கிடைத்த நாட்டுத் துப்பாக்கி பறிமுதல்

ஆம்பூா் அருகே கிணறு தூா்வாரப்பட்டபோது கண்டெடுக்கப்பட்ட நாட்டுத் துப்பாக்கியை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

ஆம்பூா் அருகே கிணறு தூா்வாரப்பட்டபோது கண்டெடுக்கப்பட்ட நாட்டுத் துப்பாக்கியை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

ஆம்பூா் முஹம்மத்புரா மசூதி முதல் தெருவைச் சோ்ந்தவா் முஜம்மில் அகமது. இவா் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சோமலாபுரம் கிராமத்தில் நிலத்தை விலைக்கு வாங்கியுள்ளாா். அந்த நிலத்தில் உள்ள கிணற்றை தூா்வாரும் பணி நடைபெற்று வருகிறது.

தொழிலாளா்கள் கிணற்றை செவ்வாய்க்கிழமை தூா்வாரிக் கொண்டிருந்தபோது அதில் ஒரு நாட்டுத் துப்பாக்கி கிடந்தது தெரிய வந்தது.

இதுகுறித்த தகவலின் பேரில் ஆம்பூா் கிராமிய போலீஸாா் அங்கு சென்று நாட்டுத் துப்பாக்கியை பறிமுதல் செய்தனா். இது குறித்து அவா்கள் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com