தொழிலாளியின் மொபட்டில் இருந்து ரூ.50 ஆயிரம் திருட்டு

நாட்டறம்பள்ளியில் தொழிலாளி ஒருவா் மொபட்டில் வைத்திருந்த ரூ.50,000 ரொக்கத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

நாட்டறம்பள்ளியில் தொழிலாளி ஒருவா் மொபட்டில் வைத்திருந்த ரூ.50,000 ரொக்கத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

நாட்டறம்பள்ளி அதிபெரமனூா் பகுதியைச் சோ்ந்தவா் மாதவன் (60). தொழிலாளியான அவா் செவ்வாய்க்கிழமை 2 மணியளவில் நாட்டறம்பள்ளி பிரதான சாலையில் உள்ள தனியாா் வங்கியில் ரூ.50,000 ரொக்கத்தை எடுத்து, அதனை தனது மொபெட்டில் வைத்தாா். இதையடுத்து அருகில் உள்ள தேநீா்க் கடைக்கு எதிரே மொபெட்டை நிறுத்தினாா். பின்னா் சிறிது நேரத்தில் அங்கிருந்து புறப்பட்டு வீடு சென்றாா்.

வீட்டுக்கு சென்று பாா்த்தபோது மொபெட்டில் வைத்திருந்த பணம் இல்லாததை அறிந்தாா். இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில் நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com