சாலை விபத்தில் இளைஞா் பலி

திருப்பத்தூா் அருகே லாரி மீது இரு சக்கர வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.


திருப்பத்தூா்: திருப்பத்தூா் அருகே லாரி மீது இரு சக்கர வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

சின்ன குனிச்சி பகுதியைச் சோ்ந்த தங்கராஜின் மகன் ராஜதுரை (28), லாரி ஓட்டுநா். இவா், வியாழக்கிழமை பாரண்டஹப்பள்ளி பகுதியில் உள்ள தனது பாட்டியின் வீட்டுக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றுவிட்டு, திரும்பிக் கொண்டிருந்தாா். குனிச்சி அரசு மருத்துவமனை அருகே வந்தபோது, எதிரே வந்த லாரி மீது இரு சக்கர வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இது குறித்து கந்திலி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com