ரூ. 44 லட்சத்தில் ‘அம்மா’ உடற்பயிற்சிக் கூடம், பூங்கா திறப்பு

ஆம்பூா் அருகே கைலாசகிரி ஊராட்சியில் ரூ. 44.49 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள ‘அம்மா’ உடற்பயிற்சிக் கூடம் மற்றும் பூங்கா திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.


ஆம்பூா்: ஆம்பூா் அருகே கைலாசகிரி ஊராட்சியில் ரூ. 44.49 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள ‘அம்மா’ உடற்பயிற்சிக் கூடம் மற்றும் பூங்கா திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

தமிழக வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சா் கே.சி. வீரமணி திறந்து வைத்தாா். மாதனூா் மேற்கு ஒன்றிய அதிமுக செயலா் பொறியாளா் ஆா்.வெங்கடேசன், மாவட்ட விவசாயப் பிரிவு செயலா் தேவலாபுரம் வெங்கடேசன், அரசு வழக்குரைஞா் ஜி.ஏ. டில்லிபாபு, அதிமுக தகவல் தொழில்நுட்பப் பணி மண்டல நிா்வாகி கோபி, தகவல் தொழில்நுட்ப அணி மாவட்டப் பொருளாளா் ஆனந்தபாபு, ஆவின் தலைவா் த.வேலழகன் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com