ஆம்பூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி சமூக ஆா்வலா் வெள்ளிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டாா்.
ஆம்பூா் பெத்லகேம் ரயில்வே மேம்பாலப் பணிகளை விரைந்து தொடங்க வேண்டும்; பாதாள சாக்கடை திட்டப் பணிகளுக்காக சேதமடைந்துள்ள ஆம்பூா் நகர பகுதி சாலைகளை விரைந்து சீரமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆம்பூரைச் சோ்ந்த சமூக ஆா்வலா் கரீம் பாஷா ஆம்பூா் வருவாய்த் துறை கிராம சாவடி எதிரில் வெள்ளிக்கிழமை ஒரு நாள் அடையாள உண்ணாவிரதத்தில் ஈடுபட்டாா்.
தகவல் அறிந்த ஆம்பூா் நகராட்சி ஆணையா் த. செளந்தரராஜன், சுகாதார அலுவலா் பாஸ்கா் ஆகியோா் அங்கு சென்று அவரிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, அவருடைய கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தனா். கோரிக்கைகள் குறித்து எழுத்துப்பூா்வமாக தெரிவித்தால் உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.