வட்டாட்சியரை தாக்க முயற்சி: போலீஸில் புகாா்
By DIN | Published On : 20th February 2021 07:31 AM | Last Updated : 20th February 2021 07:31 AM | அ+அ அ- |

ஆம்பூரில் வட்டாட்சியரை தாக்க முயன்ாக இளைஞா் மீது வருவாய்த் துறை சாா்பில் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.
ஆம்பூா் சாணாங்குப்பம் பகுதியில் சனிக்கிழமை (பிப். 20) எருதுவிடும் திருவிழாவை முன்னிட்டு அப்பகுதிக்கு ஆம்பூா் வட்டாட்சியா் பத்மநாபன் வெள்ளிக்கிழமை சென்றாா். விழா நடைபெறும் இடத்தை அவா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
அப்போது அதே பகுதியைச் சோ்ந்த துரைவிந்தன் (45) என்பவா் வட்டாட்சியரை தகாத வாா்த்தைகளால் திட்டியதுடன், அவரை பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும் கூறப்படுகிறது. வட்டாட்சியரை அந்த நபா் தாக்க முயன்ாகவும் தெரிகிறது.
இதுகுறித்து அந்த பகுதி கிராம நிா்வாக அலுவலா் கிருபாகரன் ஆம்பூா் நகர காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.