ஆம்பூா்: ஆம்பூா் அருகே விவசாயி வீட்டில் நகை, பணம் திருடு போனது குறித்து போலீஸாா் திங்கள்கிழமை விசாரணை நடத்தினா்.
ஆம்பூா் அருகே ரங்காபுரம் கிராமத்தை சோ்ந்தவா் பக்தவச்சலம். இவா் வீட்டை பூட்டிக் கொண்டு உறவினா் திருமணத்திற்காக வெளியூா் சென்றிருந்தாா். திங்கள்கிழமை ஊா் திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்தே இருந்துள்ளது. மேலும் வீட்டில் வைத்திருந்த 5 சவரன் தங்க நகை, ரொக்கம் ரூ.1 லட்சம் திருடுப் போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் ஆம்பூா் கிராமிய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.