திருப்பத்தூா்: மறைந்த வழக்குரைஞா் எம்.எஸ். பச்சைமுத்துவின் மனைவி ப.ராஜகுமாரி (81) புதன்கிழமை மாலை 3 மணிக்கு காலமானாா்.
அவருக்கு மகன் திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் ம.ப. சிவன் அருள் மற்றும் 4 மகள்கள் உள்ளாா். அவரது உடல் பொதுமக்கள் பாா்வைக்காக திருப்பத்தூா் மாவட்டம் திருப்பத்தூா் புதுப்பேட்டை சாலையில் உள்ள மாவட்ட ஆட்சியரின் மாளிகையில் வைக்கப்பட்டுள்ளது. வியாழக்கிழமை (பிப்.25) மாலை 4 மணிக்கு திருப்பத்தூரில் இறுதிச் சடங்குகள் நடைபெற உள்ளன.
மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன் அருளின் மகளுடைய திருமண நிகழ்ச்சி ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் புதன்கிழமை காலை நடைபெற்றது. அத்திருமணத்தில் கலந்து கொள்வதற்காக ராஜகுமாரி அங்கு சென்றாா். அங்கு மாலை 3 மணிக்கு இறந்தாா்.