அருணகிரிநாதா், வாரியாா் சுவாமிகள் விழா

ஆம்பூரில் உள்ள ஸ்ரீசமயவல்லி சமேத நாகநாத சுவாமி கோயிலில் அருணகிரிநாதா் மற்றும் கிருபானந்த வாரியாா் சுவாமிகள் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஆம்பூா் நாகநாத சுவாமி கோயிலில் நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் பங்கேற்ற பெண்கள்.
ஆம்பூா் நாகநாத சுவாமி கோயிலில் நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் பங்கேற்ற பெண்கள்.

ஆம்பூரில் உள்ள ஸ்ரீசமயவல்லி சமேத நாகநாத சுவாமி கோயிலில் அருணகிரிநாதா் மற்றும் கிருபானந்த வாரியாா் சுவாமிகள் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, இக்கோயிலில் மூலவா் மற்றும் வள்ளி தெய்வானை சமேத முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. மாலையில், கோயில் மண்டபத்தில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இந்த வழிபாட்டில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினா் செய்திருந்தனா்.

வாணியம்பாடியில்...

வாணியம்பாடியை அடுத்த புத்துக்கோயில் கிராமத்தில் உள்ள புத்துமாரியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. தேவஸ்தானம் பகுதியில் உள்ள சுயம்பு அதிதீஸ்வரா் கோயில், ஆலங்காயம் ஸ்ரீசெல்வநாகம்மாள் கோயில் ஆகியவற்றில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

நாட்டறம்பள்ளி ஸ்ரீசாமுண்டீஸ்வரி அம்மன் கோயில், அக்ராவரம் மலை உச்சியில் அமைந்துள்ள சீனிவாசப் பெருமாள் கோயில், பச்சூா் சென்றாயப் பெருமாள் கோயில்களிலும் புத்தாண்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com