ஏரியில் செம்மண் கடத்திய மினி லாரி பறிமுதல்

நாட்டறம்பள்ளி அருகே ஏரியில் இருந்து செம்மண் கடத்தியதாக மினி லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

நாட்டறம்பள்ளி அருகே ஏரியில் இருந்து செம்மண் கடத்தியதாக மினி லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

நாட்டறம்பள்ளி வட்டம், பெரிய கம்மியம்பட்டு ஏரியில் இருந்து அனுமதியின்றி மண் எடுத்து லாரியில் கடத்தி விற்பனை செய்யப்படுவதாக நாட்டறம்பள்ளி வட்டாட்சியருக்கு ஞாயிற்றுக்கிழமை ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து வட்டாட்சியா் சுமதி தலைமையில் வருவாய்த் துறையினா் அங்கு சென்று ஏரியில் மண் கடத்திய மினி லாரியை பறிமுதல் செய்து நாட்டறம்பள்ளி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com