தில்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்துக்கு ஆதரவாக ஆம்பூரில் எஸ்டிபிஐ மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து தில்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனா். அவா்களுக்கு ஆதரவாக எஸ்டிபிஐ கட்சியினா் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் ஆம்பூா் ரயில் நிலையம் எதிரில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
எஸ்டிபிஐ கட்சியின் ஆம்பூா் தொகுதியின் தலைவா் அசதுல்லா தலைமை வகித்தாா். போராட்டத்தில் ஈடுபட்ட 57 பேரை ஆம்பூா் நகர போலீஸாா் கைது செய்தனா்.