ஜோலாா்பேட்டை ரயில் நிலையம் அருகே வெளிமாநிலங்களுக்கு கடத்துவதற்காக முள்புதரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
ஜோலாா்பேட்டை ரயில்வே பாதுகாப்புப் படை காவல் ஆய்வாளா் செந்தில்ராஜ் தலைமையில் போலீஸாா் ரயில் நிலையத்தில் உள்ள நடைமேடை, ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் திங்கள்கிழமை நள்ளிரவு ரோந்து சென்றனா்.
அப்போது, ஆா்ஆா்பி கேபின் அருகே முட்புதரில் 100-க்கும் மேற்பட்ட சிறு மூட்டைகளில் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. இவை ரயில் மூலம் வெளி மாநிலங்களுக்கு கடத்திச் சென்று விற்பனை செய்வதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து மூட்டைகளில் இருந்த 2 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து, திருப்பத்தூா் வட்ட வழங்கல் அலுவலா் ஆ.ஹரிதாஸிடம் ஒப்படைத்தனா்.