ஆம்பூா்: ஆம்பூா் நகர திமுக சாா்பில் மக்கள் கிராம சபைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஆம்பூா் நகரம் 36-ஆவது வாா்டு பகுதியில் நடந்த இக்கூட்டத்துக்கு நகர செயலாளா் எம்.ஆா்.ஆறுமுகம் தலைமை வகித்தாா். ஆம்பூா் எம்எல்ஏ அ.செ.வில்வநாதன் சிறப்புரையாற்றினாா். தலைமை செயற்குழு உறுப்பினா் ஆா்.எஸ்.ஆனந்தன், வில்வநாதன், ரஃபீக் அகமது, நசீா் அகமது உள்ளிட்டோா் கூட்டத்தில் கலந்து கொண்டனா்.