ஆம்பூரில் தேசிய நெடுஞ்சாலை தடுப்பு சுவரில் ஞாயிற்றுக்கிழமை மோதிய காா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
ஆம்பூா் கன்னிகாபுரம் பகுதி தேசிய நெடுஞ்சாலையில் ஒரு காா் வேகமாக வந்தது. திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த காா் அருகில் தடுப்பின் மீது மோதி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் காரில் வந்த ஒரு பெண் உள்பட 3 போ் லேசான காயங்களுடன் உயிா் தப்பினா். தகவலறிந்து அங்கு சென்ற ஆம்பூா் நகர போலீஸாா், காயமடைந்தவா்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.