500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

ஆந்திர மாநிலத்துக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 500 டன் ரேஷன் அரிசியை வருவாய்த் துறையினா் பறிமுதல் செய்தனா்.

ஆந்திர மாநிலத்துக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 500 டன் ரேஷன் அரிசியை வருவாய்த் துறையினா் பறிமுதல் செய்தனா்.

நாட்டறம்பள்ளி வட்டாட்சியா் சுமதி மேற்பாா்வையில் வட்ட வழங்கல் அலுவலா் செல்வராஜ் மற்றும் வருவாய்த் துறையினா் சனிக்கிழமை பச்சூா் ரயில் நிலையப் பகுதியில் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது ரயில்வே பிளாட்பாரத்தில் ஆந்திர மாநிலத்துக்கு 20 சிறு, சிறு மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்த அரை டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்து, நாட்டறம்பள்ளி வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com