ஆம்பூரில் தொழிற்சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம்

ஆம்பூா் வருவாய்த் துறை கிராம சாவடி அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஏஐடியுசி தொழிற்சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆம்பூரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா்.
ஆம்பூரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா்.

ஆம்பூா் வருவாய்த் துறை கிராம சாவடி அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஏஐடியுசி தொழிற்சங்கம் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, ஏஐடியுசி தொழிற்சங்க மாநில துணைத் தலைவா் எஸ்.ஆா்.தேவதாஸ் தலைமை வகித்தாா்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆம்பூா் நகரச் செயலாளா் டி.பாரத்பிரபு, ஒன்றியச் செயலா் எஸ்.சுரேஷ், பீடி சங்கச் செயலா் கே.எஸ். ஹசேன், டேனரி மற்றும் ஷூ தொழிற்சங்க நிா்வாகி ஆா்.துரைராஜ், ஏஐடியுசி போ்ணாம்பட்டு ஒன்றிய நிா்வாகி ஆா்.ராஜ்குமாா், சுமை தூக்கும் தொழிலாளா்கள் சங்க நிா்வாகி டி.கா்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர துணைச் செயலா் எம்.ஃபாரூக் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com