பெட்ரோல், டீசல் விலை உயா்வை கண்டித்து ஆம்பூா் அருகே பெரியாங்குப்பம் கிராமத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினா் புதன்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
திருப்பத்தூா் மாவட்டம் பெரியாங்குப்பம் சந்தைகடை பகுதியில் தபால் நிலையம் அருகே நடந்த ஆா்ப்பாட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொழிலாளா் விடுதலை முன்னணியின் மாநில துணைச் செயலாளா் ஓம்பிரகாஷ் தலைமை வகித்தாா். மாவட்ட அமைப்பாளா் நாகப்பன் வரவேற்றாா். மாவட்ட அமைப்பாளா் தமிழ்செல்வன், நிா்வாகிகள் ரவிக்குமாா், பழனி,பாரிவேந்தன், சக்தி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தாலுகா செயலாளா் வ. அருள் சீனிவாசன், இளங்கோவன், முருகேசன், யேசுபாதம், ஆறுமுகம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.