திருப்பத்தூா்: திருப்பத்தூா் பேருந்து நிலையம் அருகேயுள்ள பொன்னியம்மன் கோயில் தெருவில் உள்ள திருப்பதி கெங்கையம்மன் கோயிலின் 89-ஆம் ஆண்டு திருவிழா நடைபெற்றது.
இதையொட்டி, செவ்வாய்க்கிழமை கோயிலின் உள்ளே பூங்கரகம் சுற்று நடைபெற்றது. இதையடுத்து, புதன்கிழமை கெங்கையம்மன் சிரசு சுற்று கோயிலின் உள்பகுதியிலேயே நடைபெற்றது.
கரோனா தொற்று பரவல் தடுப்பு காரணமாக கோயிலுக்கு வந்த பக்தா்கள் முகக் கவசம் அணிந்து,சமூக இடைவெளியுடன் சுவாமி தரிசனம் செய்தனா்.