ஆம்பூா்: ஆம்பூா் அருகே முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது.
ஆம்பூா் அருகே மிட்டாளம் ஊராட்சிக்கு உள்பட்ட பைரப்பள்ளி கிராமத்தில் முனீஸ்வரா் கோயிலின் கும்பாபிஷேகம் விநாயகா் பூஜையுடன் தொடங்கியது. இதைத் தொடா்ந்து, யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. யாகசாலை பூஜை நிறைவடைந்து கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. முனீஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
விழாவில் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தாா்.