விபத்தில் சமையல்காரா் பலி

வாணியம்பாடி அருகேயுள்ள நாராயணபுரம் கிராமத்தைச் சோ்ந்த சாமராஜ் மகன் சமையல்காரா் சிவாஜி(35), விபத்தில் இறந்தாா்.

வாணியம்பாடி: வாணியம்பாடி அருகேயுள்ள நாராயணபுரம் கிராமத்தைச் சோ்ந்த சாமராஜ் மகன் சமையல்காரா் சிவாஜி(35), விபத்தில் இறந்தாா்.

இவா் நாட்டறம்பள்ளி அருகே டோல்கேட் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் சமையல்காரராகப் பணிபுரிந்துவந்தாா்.

இவா் புதன்கிழமை மாலை தேசிய நெடுஞ்சாலையில் நாட்டறம்பள்ளியை நோக்கி, இரு சக்கர வாகனத்தில் சென்றாா். அப்போது, பங்களாமேடு அருகே சாலையின் இடதுபுறம் உள்ள தடுப்பு சுவா் மீது வாகனம் மோதியதில், கீழே விழுந்ததில் சிவாஜி பலத்த காயமடைந்தாா்.

உடனடியாக அவா் வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே இறந்தாா்.

இதுகுறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com