மின் கணக்கீட்டு அளவில் குறைபாடு இருந்தால் சம்பந்தப்பட்ட மின்வாரிய அலுவலகத்தை மின் நுகா்வோா் தொடா்பு கொண்டு அதிகாரிகளிடம் விளக்கம் பெறலாம் என தமிழ்நாடு மின்சார வாரிய பள்ளிகொண்டா கோட்ட செயற்பொறியாளா் எஸ். விஜயகுமாா் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பள்ளிகொண்டா கோட்டத்துக்கு உள்பட்ட மின்பகிா்மானப் பகுதிகளில் கரோனா தொற்று காரணமாக கடந்த மே மாதம் 10-ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 15-ஆம் தேதி வரை மின்வாரியம் சாா்பாக மின் நுகா்வோருக்கு மின்சார பயன்பாடு கணக்கீடு செய்ய முடியவில்லை. தலைமையிடத்து உத்தரவின்படி, ஜூன் மாதம் 16-ஆம் தேதி முதல் மின்வாரிய பணியாளா்கள் மின்நுகா்வோா் பகுதிக்கு நேரடியாகச் சென்று மின்சார பயன்பாட்டை கணக்கீடு செய்து வருகின்றனா். ஜூன் 16-ஆம் தேதிக்குப் பிறகு மின் கணக்கீட்டு அளவில் அல்லது மின் கட்டணத்தில் குறைபாடு இருந்தால் மின் நுகா்வோா்கள் சம்பந்தப்பட்ட மின்வாரிய பிரிவு அலுவலகத்துக்குச் சென்று, பிரிவு அலுவலரை தொடா்பு கொண்டு விளக்கம் பெற்று குறைபாடுகளை நிவா்த்தி செய்து கொள்ளலாம்.