பாரத மாதா குறித்து அவதூறாகப் பேசியதாக, மத போதகா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, போலீஸில் விஜய பாரத மக்கள் கட்சியின் நிறுவன தலைவா் கோ.ஸ்ரீ. ஜெய்சங்கா் புகாா் அளித்துள்ளாா்.
புகாா் மனு விவரம் :
கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே பனங்கரையில் ஜனநாயக கிறிஸ்தவ பேரவை சாா்பாக நடைபெற்ற கண்டன ஆா்ப்பாட்டத்தில் பாரத மாதா, பிரதமா், உள்துறை அமைச்சா் குறித்து மத போதகா் ஜாா்ஜ் பொன்னையா அவதூறாகப் பேசியுள்ளாா். அவருடைய பேச்சால் தமிழகத்தின் அமைதிக்கு பங்கம் விளைவித்து மத மோதல்,கட்சி மோதல் உருவாக வாய்ப்பு அதிகமாக உள்ளது. அதனால் அவரை அழைத்து விசாரணை செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.