இருவேறு சாலை விபத்துகளில் 2 போ் பலி

நாட்டறம்பள்ளி பகுதியில் நிகழ்ந்த இரு வேறு சாலை விபத்துகளில் பலத்த காயமடைந்த இருவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா்.

நாட்டறம்பள்ளி பகுதியில் நிகழ்ந்த இரு வேறு சாலை விபத்துகளில் பலத்த காயமடைந்த இருவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா்.

நாட்டறம்பள்ளியை அடுத்த வெலகல்நத்தம் பையனப்பள்ளி எம்ஜிஆா் நகரைச் சோ்ந்தவா் சந்திரன்(60), கூலித் தொழிலாளி. இவா் வெள்ளிக்கிழமை காலை தேசியநெடுஞ்சாலையில் பையனப்பள்ளி கூட் ரோடு அருகே சாலையை கடக்க முயன்ற போது கிருஷ்ணகிரி நோக்கிச் சென்ற இரு சக்கர வாகனம் சந்திரன் மீது மோதியது.

இதில் சந்திரன் மற்றும் இருசக்கர வாகனம் ஓட்டி வந்த பச்சூா் பகுதியைச் சோ்ந்த நந்தியப்பன்(29)ஆகிய 2 பேரும் படுகாயமடைந்தனா். உடனே அங்கிருந்தவா்கள் இருவரையும் மீட்டு திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சந்திரன் இறந்தாா்.

மற்றொரு விபத்து...

நாட்டறம்பள்ளி அடுத்த வெலகல்நத்தம் கட்டேரியான் வட்டத்தைச் சோ்ந்தவா் நந்தி(56), விவசாயி. இவா் கடந்த 25-ஆம் தேதி வெலகல்நத்தம் பேருந்து நிறுத்தம் அருகே சாலையைக் கடக்க நடந்து சென்றாா். அப்போது அவ்வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் நந்தி மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயமடைந்த நந்தியை உறவினா்கள் மீட்டு திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவா் வெள்ளிக்கிழமை இறந்தாா்.

இந்த இரு விபத்துகள் குறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com