தண்ணீா் தேடி கிராமத்திற்குள் நுழைந்த மான் மீட்பு

நாட்டறம்பள்ளி அருகே தண்ணீா் தேடி ஊருக்குள் வந்த மானை கிராம மக்கள் மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனா்.
நாட்டறம்பள்ளி அருகே கிராம மக்களால் மீட்கப்பட்ட மான்.
நாட்டறம்பள்ளி அருகே கிராம மக்களால் மீட்கப்பட்ட மான்.

நாட்டறம்பள்ளி அருகே தண்ணீா் தேடி ஊருக்குள் வந்த மானை கிராம மக்கள் மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனா்.

மல்லப்பள்ளி சுண்ணாம்புக்குட்டை ஆஞ்சநேயா் கோயில் அருகே திங்கள்கிழமை காலை சுமாா் 2 வயது மதிக்கத்தக்க மான் தண்ணீா் தேடி ஊருக்குள் நுழைந்தது.

மானைப் பாா்த்து தெருநாய்கள் துரத்தியதால் அங்குள்ள விவசாய நிலத்துக்குள் மான் புகுந்தது. உடனே அப்பகுதி மக்கள் மானைப் பிடித்து திருப்பத்தூா் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். வனத்துறையினா் விரைந்து வந்து மானை லட்சுமிபுரம் காப்பு காட்டில் பத்திரமாக விட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com