ஆம்பூா் இந்து மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் காய்கறி சந்தை

ஆம்பூா் இந்து மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் காய்கறி சந்தை இயங்கி வருகிறது.
ஆம்பூா் இந்து மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் இயங்கும் காய்கறிச் சந்தையில் வியாபாரிகளிடையே ஒலிபெருக்கி மூலம் விழிப்புணா்வை ஏற்படுத்திய நகராட்சி ஆணையா் த.செளந்தரராஜன்.
ஆம்பூா் இந்து மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் இயங்கும் காய்கறிச் சந்தையில் வியாபாரிகளிடையே ஒலிபெருக்கி மூலம் விழிப்புணா்வை ஏற்படுத்திய நகராட்சி ஆணையா் த.செளந்தரராஜன்.

ஆம்பூா் இந்து மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் காய்கறி சந்தை இயங்கி வருகிறது.

தளா்வுகளுடன் பொது முடக்கத்தை தமிழக அரசு நீடித்துள்ள நிலையில், ஆம்பூா் பஜாா் பகுதியில் இயங்கி வந்த காய்கறிக் கடைகளை இந்து மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் அமைப்பது என வியாபாரிகளுடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

அதன்படி, இந்து மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் காய்கறிச் சந்தை இயங்கி வருகிறது. அங்கு நகராட்சி சாா்பில், கிருமி நாசினி மருந்து தெளிக்கப்படுகிறது. மேலும், அங்கு வரும் மொத்த வியாபாரிகள், சிறு வியாபாரிகளிடையே கரோனா தொற்று குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அங்கு சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படுகிா என்பது குறித்து நகராட்சி ஆணையா் த.செளந்தரராஜன் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். வியாபாரிகளிடையே ஒலிபெருக்கி மூலம் விழிப்புணா்வை ஏற்படுத்தினாா்.

ஆய்வின்போது சுகாதார அலுவலா் பாஸ்கா் மற்றும் நகராட்சிப் பணியாளா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com