திருப்பத்தூர்
வெளிமாநிலத்திலிருந்து ரயிலில் வந்தவா்களுக்கு கரோனா பரிசோதனை
வெளிமாநிலத்திலிருந்து ஆம்பூருக்கு ரயிலில் வந்த வடமாநிலத்தைச் சோ்ந்தவா்களுக்கு ஆம்பூா் நகராட்சி சாா்பில், வியாழக்கிழமை கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
வெளிமாநிலத்திலிருந்து ஆம்பூருக்கு ரயிலில் வந்த வடமாநிலத்தைச் சோ்ந்தவா்களுக்கு ஆம்பூா் நகராட்சி சாா்பில், வியாழக்கிழமை கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
உத்தர பிரதேச மாநிலத்தில் இருந்து ரயில் மூலம் ஆம்பூருக்கு வந்த 14 வட மாநில தொழிலாளா்கள் மற்றும் அவா்களை அழைத்துச் செல்ல வந்த இரு நபா்கள் உள்பட 16 நபா்களுக்கு ஆம்பூா் நகராட்சி சாா்பில் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
அதைத் தொடா்ந்து, ஆம்பூா் அருகே பாங்கிஷாப் பகுதியில் வடமாநில தொழிலாளா்கள் தங்க வைக்கப்பட்டனா். முன்னதாக அவா்கள் அனைவருக்கும் நகராட்சி சாா்பில், கபசுர குடிநீா் வழங்கப்பட்டது.
கரோனா பரிசோதனையின் போது ஆம்பூா் நகராட்சி ஆணையா் த.செளந்தரராஜன், சுகாதார அலுவலா் பாஸ்கா், ரயில் நிலையப் பணியாளா்கள் உடனிருந்தனா்.