வாணியம்பாடி: நாட்டறம்பள்ளியை அடுத்த சொரக்காயல்நத்தம் ஊராட்சி அலுவலகம் எதிரே புளியமரம் திங்கள்கிழமை காலை திடீரென வேருடன் சாய்ந்து சாலையில் விழுந்தது. இதில் 3 மின் கம்பங்கள் சேதமடைந்தன.
தகவலறிந்த நாட்டறம்பள்ளி மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக அங்கு மின் இணைப்பைத் துண்டித்தனா். இதனால் அங்கு அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது.
வருவாய்த் துறையினா், மின்வாரிய அதிகாரிகள் அங்கு சென்று சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக விழுந்து கிடந்த புளியமரத்தை பொதுமக்கள் உதவியுடன் அப்புறப்படுத்தினா்.